Tuesday, February 15, 2011

காதல் - ஒரு குறைப் பிரசவக் குழந்தை




என் காதல்
ஒரு குறைப் பிரசவக் குழந்தை,

குழந்தை பிறக்கக் குறைந்தது
250 தினங்களேனும் வேண்டுமாம்.

ஆனால் உன்னைக் கண்டதும்
என் காதல் பிறந்து விட்டதே...

----------------

நீ
என்னிடம் பேசுவதை
உன் உதடுகளால்
தாங்க முடியவில்லையாம்.

நீ
என்னிடம் பேசும்
அந்த நேரத்தில்
அவை பிரிந்திருக்கின்றனவாம்.

என் உதடுகளை
சந்திக்கும் போது
அவை சொல்கின்றன.

ஆயினும்
அவற்றுக்குத் தெரியும்.........
இருவராய்ச் சந்திப்பதை விட
நால்வராய் சந்திப்பதே
இன்பம் என்று.

அதற்கான நன்றியையும்
சேர்த்தே சொல்கின்றன..

நீ என்னிடம் பேசிக்கொண்டே இரேன்
உன் உதடுகளை வம்பிழுக்க ஆசை.

----------------

ஒருநாள்
உன்னை நான் காதலிப்பதாகக்
காதலிடம் சொன்னேன்

உனைக்கண்டு விட்ட அது
என்னிடம் ஒத்துழைக்க மறுத்து விட்டது

காதலே உன்னைக்காதலிக்கிறதாம்.

----------------

6 comments:

  1. //நீ என்னிடம் பேசிக்கொண்டே இரேன்
    உன் உதடுகளை வம்பிழுக்க ஆசை//.
    ரொமான்ஸ் கவிதை போல ..வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. // S.Sudharshan said...
    ரொமான்ஸ் கவிதை போல ..வாழ்த்துக்கள் :) //

    ரொமான்ஸ் கவிதையே தான்... நன்றி

    ReplyDelete
  3. //மதுரை சரவணன் said...
    arumai. vaalththukkal //

    வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  4. எஸ்காவின் மூலம் உங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்தது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. // Philosophy Prabhakaran said...
    எஸ்காவின் மூலம் உங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்தது... வாழ்த்துக்கள்... //

    வருகைக்கு நன்றி ஃபிலாசஃபி பிரபாகரன்.... எஸ்காவுக்கும்.....

    ReplyDelete